"நீட் தேர்வு, மாணவர்களுக்கு பாதிப்பை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" -ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். ராஜன்
நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று ஒய்வு பெற்ற நீதிபதி கே. என். ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா ? என ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கே என். ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி கே. என். ராஜன், நீட் தேர்வு ரத்து, இதற்கு மாற்று வழியா ? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
Comments